இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



சனி, நவம்பர் 20, 2010

ஒபாமா இந்தியா வருகை: யாருக்கு நன்மை? இந்தியாவுக்கா? அமெரிக்காவுக்கா?

ருப்புக் கொடிப் போராட்டங்கள், எதிர்ப்புச் சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டங்கள், பந்த்களுக்கு இடையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியாவில் ஒரு 'நான்கு நாள் சுற்றுப் பயணத்தை' முடித்துவிட்டுச் சென்றுள்ளார். அமெரிக்கப் படைகளின் பாதுகாப்புடன், 250 க்கும் மேற்பட்ட அமெரிக்க முதலாளிகளுடன் (CEOs) வந்து ஒரு பொருளாதாரப் படையெடுப்பையே நடத்திவிட்டு சென்றுள்ளார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு நடத்தி தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளார், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். நவம்பர் 6 ஆம் தேதி மும்பை வந்திறங்கிய ஒபாமா, அங்கு இந்திய, அமெரிக்க முதலாளிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மறுநாள் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் நவம்பர் 8 ஆம் தேதி டெல்லியில் மன்மொகன் சிங்கையும், பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேசினார். பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் பேசிவிட்டு மறுநாள் நவம்பர் 9 ஆம் தேதி இந்தோனேசியா கிளம்பிச் சென்றுவிட்டார் (தீபாவளி கொண்டாடியது, ஊர் சுற்றியது, மாணவர்களிடம் உரையாடியது, விதவிதமான உணவு உண்டது, காந்திக்கு அஞ்சலி செலுத்தியது போன்ற பத்திரிகைகளின் முன்பக்கங்களை அலங்கரித்த இதர செய்திகள் பற்றி விரிவாக சொல்லத் தேவையில்லை). இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாகவே ஒபாமா இந்தியா வந்து சென்றுள்ளார்.

அயோத்தி: மரத்தடி தீர்ப்பு

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி தீர்ப்பு சர்ச்சைக்குரிய இடம்தான் இராமர் பிறந்த இடம் என்று கூறியுள்ளது. இதுவரை இராமர் கோயிலைத் தேடிக்கொண்டிருந்த தொல்லியல் ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், அறிவியல் அறிஞர்களும் உறுதிபடுதர்த முடியாத இடத்தை இந்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இராமர் கிருதயுகத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். கற்பனைக்கு எட்டாத ஆண்டுகளுக்கு முன்பு, இராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் இடம், சர்ச்சைக்குரிய இந்த இடம்தான் என்று தீர்ப்பளித்த நீதிபதி தரம்சீர் சர்மாவை பாராட்டாமல் இருக்க முடியாது.

ஸ்பெக்ட்ரம்: ஊழலுக்கெல்லாம் 'இராசா

பெயரில் மட்டுமே முற்போக்கை வைத்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) ஊழல் உச்சபட்ச எல்லையை எட்டியுள்ளது. மகாராஷ்டிரத்தில் கார்கில் வீரர்களுக்கு வீடு ஒதுக்கீட்டில் முதல்வர் அசோக் சவான் ஊழல். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் முறைகேடு. ரூ.70,000 கோடி செலவில் நடத்திய காமன்வெல்த் போட்டியில் ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் கல்மாடி பல கோடி ஊழல். அடுத்ததாக '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா ரூ.1.76 இலட்சம் கோடி (ரூ.1,76,000,00,00,000) ஊழல்.

இந்தியக் கல்வி வரலாறு

1. பிராமணக் கல்வி முறையும், பௌத்தக் கல்வி முறையும்

ம்  நாட்டில் 54 % மக்கள் 25 வயதுக்குட்பட்டோரே எனில், நம் நாடு இளைஞர்களின் நாடு என கூறலாம். ஆனால், இந்த இளைஞர்களின் நாட்டில் தான் உலகிலேயே அதிக கல்வி அறிவில்லாத மக்கள் வசிக்கின்றனர். இந்தியாவை விட மக்கள் தொகையில் பெரிய நாடான சீனா மற்றும் பல வறுமை தோய்ந்த நாடுகளில் 100 % கல்வியறிவை பலர் பத்தாண்டுகளுக்கு முன்னரே எட்டி விட்டனர். 63 ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரம் வாங்கிவிட்டோம் என்று கூறிக்கொள்கிற நம் நாட்டிலோ, இன்றும் மூன்றில் இரண்டு பங்கு கூட கற்றவர்கள் என்ற நிலையை எட்ட முடியாமல் இருப்பது மிகவும் கேவலமானது, வெட்கப்படவேண்டியது இந்திய அரசின் அக்கறையற்ற தன்மைக்கு இது ஒரு நல்ல சான்று. உண்மையில் அரசால் அனைவருக்கும் கல்வி கொடுக்க முடியாத ஒரு மிகப்பெரிய கடினமான பணியா என்றால் இல்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். இந்திய ஆளும் வர்க்கங்களின் தலைமைப் பாத்திரத்தில் இருக்கும் மேல்சாதிக்காரர்கள் அனை வருக்கும் கட்டாய கல்வியை வழங்க மறுத்து வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு ஒரே கருவியான கல்வியை பெற நாம் அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் நாம் எல்லோரும் இந்திய கல்வி வரலாறு பற்றிய ஒரு அடிப்படை புரிதல் ஏற்படுத்த வேண்டுமென்ற விருப்பத்தின் விளைவே இத்தொடர் கட்டுரை. ஏனெனில் வரலாற்றை அறியாதவன் வரலாற்றை படைக்க முடியாது. எனவே அனைவருக்கும் கட்டாய, இலவச, தாய்மொழிவழிக் கல்வி என்ற நிலையை ஏற்படுத்த அனைவரும் ஒன்று திரண்டு போராடி அறிவார்ந்த சமூகத்தைப் படைப்போம். அப்போராட்டத்திற்கு வித்தாக இந்திய கல்வி கல்வி வரலாறு பற்றி பார்ப்போம்.

எந்திரன்: கற்பனை வறட்சி

 சமீபத்தில் 'கிராஃபிக்ஸ்' காட்சிகளுக்காக ஆஸ்கார் விருது பெற்ற ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார் படத்தை நிறைய பேர் பார்த்திருப்போம். ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா அதில் குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பழங்குடி மக்களைக் காடுகளிலிருந்து விரட்டியடித்துவிட்டு, அவர்களது கனிம வளங்களைக் கொள்ளையடிப்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அது தொடர்பான ஒரு புனைகதைதான் 'அவதார்'. 'டைட்டானிக்', 'இண்டிபெண்டன்ஸ் டே' போன்ற அரசியலற்ற படங்களை எடுத்த ஜேம்ஸ் கேமரூனால் இப்படிப்பட்ட தீவிரமான அரசியல் படங்களையும் எடுக்க முடியும் என்று 'அவதார்' உணர்த்தியது. 'ஜுராசிக் பார்க்' போன்ற படங்களை எடுத்த ஸ்டீபன் ஸ்பீல்பர்க்தான் நாஜிக்களின் கொடூரமான வதைமுகாம்களில் சித்திரவதைப்பட்ட யூதர்களைப் பற்றிய அருமையான படமான 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்'டையும் எடுத்தவர். 1993 இல் இப்படம் ஆஸ்கார் விருது பெற்றது. மெல் கிப்ஸனின் 'அப்போகலிப்டா' மாயன் பழங்குடிகளின் வரலாற்றை, அதன் அத்தனை யதார்த்தங்களோடும் அழகாக பதிவு செய்த ஒரு படம். இப்படி சில ஹாலிவுட் இயக்குநர்கள் உலக அரசியலையும், வரலாற்றையும் ஆழமாகப் படித்த, அரசியல் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். சில நல்ல படங்களையும் அவர்களால் எடுக்க முடிகிறது.

கொலசாமிக்கு கடிதாசி

ஏப்பா... ஏ! பெரியகருப்பா. உன் மண்ணுல வாழுற மக்களுக்கு காவகாக்குற காவக்கருப்பா, நேத்திக்கடன் தீத்து வைக்கிற மொதலக்குளம் குட்டிக்கருப்பா, கொலவபோட்டா குறி சொல்லுற சங்கிலிக்கருப்பா, கெடா வெட்டி பொங்க வைக்கிற சின்னக்கருப்பா, உனக்கொரு சேதி தெரியுமா? தெரிஞ்சாலும் தீத்து வைக்க அருவாளத் தூக்க தெம்பு இருக்கா? உன் வாசல்ல எத்தன பேரு ஞாயத்துக்காக மண்ணவாரி தூத்தாக. அந்த மண்ணுபூரா(ம்) உன் மக்க தலையிலே விழுகுது, உனக்குத் தெரியலையா.

ஆடம்பரத்தில் அரசுகள் அதலபாதாளத்தில் பொதுமக்கள்

உத்திரபிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதி, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி உள்ளது. இங்கு உள்ள 13 மாவட்டங்களை, உ.பி. அரசு புறக்கணிப்பதாகக் கூறி, தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள், கோரி வருகின்றனர்.

ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ள பண்டல்கண்ட் பகுதியில் கந்து வட்டிகாரர்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. கடன் வாங்கியவர்கள் நிலம், வீடு வைத்திருந்தால் அதை கந்துவட்டி கும்பல் அபகரித்துக் கொள்கிறது. சொத்து எதுவும் இல்லையென்றால், கடனைத் திருப்பி வசூலிக்கும் விதமே கொடூரமானது.

பெருவெடிப்பு முதல் பொதுவுடைமை வரை - பாகம் 9

பாகம்-7 இல்  மனித சமுதாயம் என்பது என்ன? அது எப்படித் தோன்றியது? எனக் கண்டோம். கடந்த இதழில், பாகம்-8 இல், சமுதாய அமைப்பைத் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உற்பத்தி முறை எவ்வாறு திகழ்கிறது என்று பார்த்தோம். உற்பத்தி முறையின் இரண்டு கூறுகளான உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் விளக்கங்களைப் பார்த்தோம். மேலும், உற்பத்தி முறை சமுதாயத்தின் அடிக்கட்டுமான மாகவும், அரசு, பண்பாடு, கலை, இலக்கியம், மதங்கள், தத்துவங்கள், கல்வி, ஆணாதிக்கம், வர்க்கங்கள், சட்டம் போன்றவை மேல்கட்டுமான மாகவும் அமைந்துள்ளன எனக் கண்டோம். இனி...

கருத்துரிமையை நொறுக்கும் இந்திய அரசின் அரக்கமுகம்

'இந்தியா தேசிய இனங்களின் ஒரு கொடுங்கோல் சிறைக்கூடம்' என்பதை பல வருடங்களாக மக்கள் அனுபவ ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் உணர்ந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தொடர்ச்சியாகப் பல வருடங்களாக தங்களது சுயநிர்ணய உரிமைக்காக பலதரப்பட்ட மக்கள் வீரதீரத்துடன் போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அது காஷ்மீராக இருந்தாலும் சரி, மணிப்பூர், அஸ்ஸாம், நாகலாந்தாக இருந்தாலும் சரி எங்கும் மக்களே தங்களது சுயநிர்ணய உரிமைக்காக இந்திய பாசிச அரசை எதிர்த்தும், இந்திய இராணுவத்தை தங்களுக்கு கிடைக்கும் கல், அம்பு என்று கிடைக்கும் ஆயுதங்களைக் கொண்டு எதிர்த்துக் கொண்டுதான் வருகிறார்கள். மக்கள் உயிர் தியாகங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. தங்களது எத்தனை உயிர்களைப் பணயம் வைத்தும் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். இதுவே காஷ்மீரிலும் கூட நடக்கிறது. ஆனால் இந்திய பாசிச அரசோ இந்த மக்கள் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக தீவிரவாத போராட்டமாக சித்தரித்து மக்களை ஒடுக்கிக் கொண்டு வருகிறது. ஆனால், காஷ்மீர் மக்கள் ஒதுங்குவதும் இல்லை. ஒடுங்குவதும் இல்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை அவர்களுடைய போராட்டக் கோரிக்கை சுய நிர்ணய உரிமையாகத் தான் உள்ளது.

வியாழன், ஆகஸ்ட் 19, 2010

சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம்: கருணாநிதியின் காலில் நசுங்கும் கருத்துரிமை

1983 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை சிங்களக் கடற்படை, சுமார் 500 தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டும், அடித்தும் கொன்றுள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்களைப் படுகாயப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படும் செய்தியை வெளியிட்டு அடிக்கடி கதறும் ஆங்கில, இந்தித் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் இதுவரை ‘இந்திய’ மீனவர்கள் கொல்லப்படும் செய்தியைக் கண்டுகொண்டதில்லை. மும்பையில் தாஜ் ஹோட்டல் தாக்குதலில் இறந்தவர்களை விட, தமிழ்நாட்டில் இறந்த மீனவர்களின் எண்ணிக்கை சில மடங்கு அதிகம். ஆனால், மும்பைத் தாக்குதலின் போது பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் திணித்த ஊடகங்கள் இதுவரை இலங்கை அரசை பெரிதாகக் கண்டிக்கக் கூட இல்லை.

நவீனத் தீண்டாமை: ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகளின் அவலம்

தமிழகத்தின் அனேக சீரழிவுகளில் நம்மைக் கவலையடையச் செய்கிற அவலமாக ஆதி திராவிடர் நலத்துறையின் கீழியங்கும் மாணவ மாணவிகளுக்கான விடுதிகள் மோசமான சூழலில் உள்ளதைக் கூறலாம். முறையான பராமரிப்பும், உள்கட்டமைப்பு வசதிகளும், கழிப்பறை முதலான வசதிகளுமற்ற நிலைகளில் இயங்கும் தமிழகத்தின் ஆதிதிராவிடர் நல மாணவ மாணவியற் விடுதிகளில் உள்ள மற்றொரு மனங்கலங்கச்செய்யும் நிலை ஆதி திராவிடர் என்கிற தீண்டாமையைக் கடைபிடித்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளாகும்.

கயர்லாஞ்சி: சாதிப் படுகொலையும் நீதிப் படுகொலையும்

‘காலம் தாழ்த்தி கிடைக்கும் நீதி அநீதிக்கு சமமானது’ என்பார்கள். இங்கு காலம் தாழ்த்திகூட நீதி கிடைப்பதில்லை. இலாப வெறிக்காக ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களைக் கொன்று குவித்த கொலைகாரர்களைக் காப்பாற்றி, நீதியை மறுத்து மீண்டுமொரு படுகொலையை போபால் மக்கள் மீது அரங்கேற்றிய நீதிமன்றத் தீர்ப்பைப் போலவே இன்னொன்றும் வந்திருக்கிறது. தலித் குடும்பமொன்றை ஊர் மையப்பகுதியில் நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி அதன் பின்பு படுகொலை செய்த சாதி வெறி பிடித்த காட்டுமிராண்டிகளுடன் கைகுலுக்கி, இனிவரும் காலங்களில் ஆதிக்க சாதியினர் எவரும் தலித் மக்கள்மீது இது போன்ற கொடூரங்களை நிகழ்த்திக் கொள்ள ‘லைசன்ஸ்’ வழங்கியிருக்கிறது கயர்லாஞ்சி தீர்ப்பு.

உங்கள் பொறுப்புள்ள பிள்ளை (கடிதம்)

அன்புள்ள அம்மாவுக்கு...

நீங்கள் பெற்றதுக்காக என் சிந்தனையும் உழைப்பும் உங்களுக்கு அடிமை கிடையாது. இது எனக்கு மட்டுமல்ல, மனிதனாக பிறந்த எல்லோருக்கும் பொருந்தும்.

என்னை நம் குடும்பத்தின் ஒருத்தன் என்று மட்டும் நீங்கள் கருதுகிறீர்கள். இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?  ‘மனித குல சமூகத்தில் நான் தனிமனிதன் மட்டுமில்லை. குடும்பத்திலும் ஒருத்தனாக இருக்கிறேன்.’

எனக்கும் பொறுப்புகள் இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். குடும்பத்தில் மட்டுமல்ல, அதைவிட மனிதகுல சமூகத்தில்!


காஷ்மீர்: இந்தியாவின் துரோக வரலாறு

பூலோக சொர்க்கம் என வர்ணிக்கப்படும் காஷ்மீர் இன்று தினந்தோறும் நடைபெறும் கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது. அன்றாட நிகழ்வாக பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வழியாக காஷ்மீர் பிரச்சனையை பார்த்தோமானால் சாலைகளில் பொது மக்கள் சுடப்பட்டு இறந்து கிடப்பதும், நவீன ஆயுதங்களுடன் இராணுவ வீரர்கள் தெருக்களில் அணிவகுப்பதும், சாலைகளில் வண்டிகள் தீப்பற்றி எரிவதும், ஊரடங்கு உத்தரவின் மூலம் வெறிச்சோடி கிடக்கும் தெருக்களும், போராட்டக்காரர்கள் இராணுவத்தினர் மீது கற்களை எறிவதுமான நிகழ்வுகள் காட்டப்படுகின்றன.

முதுகாட்டில் காக்கையுகுத்த பிணம் - அமித் ஷா: முகமூடி கிழிந்த இனத்துவேஷி

‘ஒரு விசயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த செப்டம்பர் 2003 ஆம் ஆண்டு குஜராத் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைத் தாங்கள் இழந்து விட்டதாக, சுப்ரிம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதன் பிறகு கடந்த ஏப்பிரலில் 2004 ஆம் ஆண்டு, ஆதரவற்ற குழந்தைகளும், அபலைப் பெண்களும் உயிரோடு எரிக்கப்படும் போது, அதைச் சற்றும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு நவீன காலத்திய நீரோ மன்னன் என்று தங்களை சுப்ரிம், கோர்ட் நீதிபதி விமர்சித்துள்ளார். சுப்ரிம் கோர்ட்டுடன் தங்களுக்குப் பிரச்சனை உள்ளதாகத் தெரிகிறதே’
அக்டோபர் 19, 2007 அன்று சி.என்.என். - ஐ.பி.என் தொலைக் காட்சியில் கரன்தாப்பர் குஜராத் முதல்வர் மோடியை பேட்டி கண்ட போது கேட்ட கேள்வி.

பெரு வெடிப்பு முதல் பொதுவுடைமை வரை பாகம் - 8

கடந்த இதழில் மனித சமுதாயம் என்பது என்ன, மனிதர்கள் எவ்வாறு ஒரு சமுதாயமாகப் பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள், அத்தகையதொரு சமுதாயம் எப்படி படிப்படியாகத் தோற்றமெடுத்தது, என்பனவற்றைக் கண்டோம். காட்டுமிராண்டி நிலை மற்றும் அநாகரிக நிலையின் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் மனிதன், நாகரிக நிலையை அடைந்தான் என்பதைக் கண்டோம். இனி...

வெள்ளி, ஜூலை 16, 2010

இராஜபக்சேவுடன் ஒப்பந்தம்: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் மன்மோகன் சிங்


'இராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி' என்று நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற எந்த அரசையும் சாராமல் இயங்கும் சர்வதேச நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த லெலியோ பஸோ என்பவரது முன்முயற்சியால் 1979 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியிலுள்ள பொலோக்னா என்ற இடத்தில் 31 நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள், பண்பாட்டு மற்றும் சமூகத் தலைவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஆகும். நோபல் பரிசு வென்ற 5 பேர் இதில் உள்ளனர். மனித உரிமைகள் மற்றும் மக்கள் உரிமைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவது இதன் செயல்பாடாகும்.

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க வழக்குரைஞர்கள் உண்ணாநிலைப் போராட்டம்


உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி 09.06.2010 முதல் மதுரை உயர்நீதிமன்ற கிளை வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் பகத்சிங், இராசேந்திரன், ராஜா, எழிலரசு, ஜெயபாரதி மற்றும் நடராஜன் ஆகிய ஆறுபேரும் காலவரையறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் 17.06.2010 அன்று முதல் 7 வழக்கறிஞர்களும், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். இந்த வழக்கறிஞர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறி மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சர்ந்த எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு 300 பேர் கைதானர்கள். தொழிலாளர் போராட்டத்தை வளர விடாமல் தடுக்க 2000 பேர் மீது வழக்கு போடப்பட்டது.

அரசு நிர்ணயித்த பள்ளிக் கட்டணமும் அத்துமீறி செயல்படும் பள்ளிகளும்

'கல்வி - தனியார்மயம்

சாராயக்கடை - அரசு மயம்”

நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கும் அதன் கீழ் உள்ள வரிகளுக்கும் தொடர்பு இல்லாதது போல் தோன்றுகிறதா? நிச்சயமாகத் தோன்றும். அவ்வாறு நாம் எந்த ஒரு விசயத்தையும் தொடர்பற்ற நிலையிலேயே எண்ண கற்பித்துள்ளது நமக்கு அளிக்கப்பட்ட கல்வி. இந்நிலை மாற வேண்டுமெனில், நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும், கேள்விகள் பல கேட்க கற்றுக்கொள்ள வேண்டும்.

போபால் விஷவாயு விபத்தில் செத்துப் போன நீதி

டிசம்பர் 2, 1984 போபாலில், மக்கள் இரவு உணவருந்திவிட்டு, எதிர்காலக் கனவுகளுடன் உறங்கச் சென்றார்கள். இன்னும் சில மணி நேரங்களில் தங்களுக்கு நேரப்போகும் பேராபத்தால் மீளா உறக்கத்தில் ஆழப்போகிறோம் என நிச்சயம் அவர்களுக்குத் தெரியாது. நல்லிரவுக்கு அருகாமையில் கடுமையான இருமல் மற்றும் கண் எரிச்சல் எற்பட்டதும், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து அடித்துக்கொண்டு வெளியேறினர். ஊரே அலறியடித்துக்கொண்டு திக்குத் தெரியாமல் ஓடுவதைக் கண்டு மக்கள் திகைத்தனர். ஓர் விஷவாயு அருகிலிருந்த யூனியன் கார்பைடு கம்பெனியிலிருந்து கொல்ல வந்தது. பொழுது விடிந்தபோது விஷவாயு 5,000 உயிர்களைப் பலிகொண்டிருந்தது. அக்கொடிய வாயுவின் பெயர் மெதில் அய்சோ சயனைடு.

இரும்புக் கோட்டை அமெரிக்கா பம்மிக் குலையும் தமிழ் சினிமா


இந்திய நாட்டில் ஏகாதிபத்திய ஊடுருவலும், முதலாளித்துவத்தின் அட்டூழியங்களும் செல்வ செழிப்பாக மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றும் மக்கள் பட்டினியில் வாழ்வதும், இறப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் வறுமையில் வாடினாலும், வறுமை மட்டும் அவர்களிடம் செழிப்பாக வாழ்கிறது. இதனை எதிர்த்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பேனா முனைகளோ, பத்திரிகைகளோ செழிப்பானவர்கள் பக்கமே ஊதுகுழலிட்டுக் கொண்டிருக்கின்றன. சினிமாவும் இதற்கு விதிவிலக்கு இல்லை. சமூகத்தின் உண்மை எதிரொளிப்புகளை திரையில் வெளிக்கொணரும் திரைப்படங்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு குறைந்து கொண்டு வருகின்றன. அப்படி வரும் திரைப்படங்கள் கூட தணிக்கை குழுவால் உண்மைகள் வெட்டப்பட்டு, சிதைந்த நிலையிலேயே வெளிவருகின்றன. மேலும், அவை முதலாளிகள் மற்றும் அவர்களது அரசை பாதிக்காத வண்ணம்தான் தயாரிக்கப்படுகின்றன.

பச்சை வேட்டை: நாகரிகத்தின் காட்டுமிராண்டி முகம்

சட்டீஸ்கர் மாநிலம், தண்டேவாடா பகுதியில் கடந்த ஏப்ரல் 6ந் தேதி சி.ஆர்.பி.எப்-ஐ சேர்ந்த 76 பேர் மற்றும் இந்த மாதத்தில் 27 சி.ஆர்.பி.எப்.-ஐ சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைப்பற்றி அனைத்து ஊடகங்களும் தன் ஜனநாயகக் கடமையாற்ற 'காட்டுமிராண்டித்தனம்”, 'பயங்கரவாதச் செயல்” என பலவாறு வர்ணித்தன. அந்த படையினருக்காக நாமும் வருந்துவோம். அவர்களது குடும்பத்தோடு சர்ந்து துக்கத்தை பகிர்ந்து கொள்வதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.

ஆனால், இந்த போர் உழைக்கும் மக்களுக்கும், பணக்கார நிறுவனங்களுக்கும் இடையில் நடக்கும் போர். அதில் உழைக்கும் மக்களுக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்திலிருந்து வரும் இராணுவத்தினர் இருப்பது காலங்காலமாக ஆளும் வர்க்கத்தினர் செய்து வரும் சூழ்ச்சியாகும். இது துரதிஷ்டவசமானது.

உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு தமிழகமெங்கும் பிரச்சார இயக்கம் - ஒரு பார்வை

மோசமடைந்து கொண்டே செல்லும் இன்றைய சமூகச் சூழலில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள் வெடித்து கொண்டு இருக்கின்றன. நம் நாட்டின் அரசியல்வாதிகளும், அவர்களை நிர்ணயிக்கும் தரகுப் பெரு முதலாளிகளும், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளும் உழைக்கும் மக்களின் உரிமைகள், உடமைகள், உணர்வுகள் ஆகிய அனைத்தையும் பறித்தெடுத்து அவர்களை நடை பிணங்களாக ஆக்க நினைக்கின்றனர். இவர்கள் அனைவரின் தாரக மந்திரமே 'பயன்படுத்தித் தூக்கியெறிதல்;” என்பதுதான். பிணந்தின்னிக் கழுகுகளாக திகழும் இத்தகைய கூட்டங்களை எதிர்த்து தங்களுடைய உரிமைகளை மீட்டெடுக்கப் போராடும் மக்களுக்காக நாம் இணைந்து போராடுவது தான் உண்மையான நாட்டுப்பற்று.

பெருவெடிப்பு முதல் பொதுவுடைமை வரை... பாகம் - 7

-மனுவேல்

இதுவரை...

இயற்கை மற்றும் சமுதாயத்தின் விஞ்ஞானப் பூர்வமான வரலாற்றை சுருக்கமாக அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை துவங்கப்பட்டது. பாகம் - 1 இல் சில கேள்விகளைத் தொகுத்துக் கொண்டு இக்கட்டுரையைத் துவக்கினோம். பாகம் 6 வரை, உலகம் தோன்றியது எப்படி? உயிர்கள் தோன்றியது எப்படி? மனிதன் தோன்றியது எப்படி? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டோம். இந்த இதழில் நாம் சமுதாயம் தோன்றியது எப்படி? என்று பார்க்க இருக்கிறோம். இனி வரும் இதழ்களில் நாம் கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடை காண்போம்.

அரசின் ஏளனமான நலத் திட்டங்கள்: தமிழ்நாட்டின் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு தொடரும் ஏமாற்றம்

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்பம்ச திட்டம் (Scheduled
Caste Special component Plan - SCSP) மற்றும் மழைவாழ் மக்களுக்கான உள்திட்டம் (Tribal Sub Plan - TSP) ஆகியவற்றின், திட்டக்கமிசனின் வழிகாட்டதல்களை சீர்குலைக்கும் அளவுக்கு, தமிழ்நாட்டின் 2009-2010 வருடத்திட்டம் இருக்கிறது. இதைக்காண ஒருவேளை பரியார்இருந்திருந்தால் சவக்குழியில் தானே போய் விழுந்திருப்பார்.

மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு... இலங்கைக் கடற்படையிடமிருந்து இந்தி மீனவHகளைக் காப்பாற்ற சிறந்த வழிகள் - 7

1. குண்டு துளைக்காத கார் போல, குண்டு துளைக்காத படகு வாங்கிக் கொடுக்கலாம்.

2. சிங்கள இராணுவம் துன்புறுத்தும் போது வலிக்காமல் இருப்பதற்கு மரத்துப் போகும் ஊசி போடுவதற்கு உதவியாக ஒரு மருத்துவரை படகில் மீனவருடன் அனுப்பலாம்.

3. படகுகளில் இந்திய தேசிய கொடிக்குப் பதிலாக சிங்கள தேசியக் கொடியைப் பறக்கவிட ஆலோசனை வழங்கலாம். (அதனால் ஒரு வேளை மன்னிப்பு கிடைக்கலாம்.)

4. கரையில் இருந்தபடி நீளமான மூங்கிலாலான தூண்டிலைக் கொண்டு மீன்பிடிக்கச் சொல்லலாம்.

5. கடற்கரையில் குளங்கள் வெட்டி அதில் மீன் வளர்த்து பிடிக்கச் சொல்லலாம்.

6. மீனவர்கள் படகுவிட ஆசைப்பட்டால் மழை நேரங்களில் காகிதப் படகு செய்து விடச் சொல்லலாம்.

7. மீனவர்கள் பொழுது போக்குவதற்கு தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்து மானாட, மயிலாட, எல்லாமே சிரிப்புதான், கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு, சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கச் சொல்லலாம்.

குறிப்பு: நாங்க ஏதாச்சும் இறையாண்மையை மீறியிருந்தால் மன்னிச்சிடுங்க சாமியோவ்.

-எம்.பழனிமுருகன்,

தஞ்சாவூர்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014