1. குண்டு துளைக்காத கார் போல, குண்டு துளைக்காத படகு வாங்கிக் கொடுக்கலாம்.
2. சிங்கள இராணுவம் துன்புறுத்தும் போது வலிக்காமல் இருப்பதற்கு மரத்துப் போகும் ஊசி போடுவதற்கு உதவியாக ஒரு மருத்துவரை படகில் மீனவருடன் அனுப்பலாம்.
3. படகுகளில் இந்திய தேசிய கொடிக்குப் பதிலாக சிங்கள தேசியக் கொடியைப் பறக்கவிட ஆலோசனை வழங்கலாம். (அதனால் ஒரு வேளை மன்னிப்பு கிடைக்கலாம்.)
4. கரையில் இருந்தபடி நீளமான மூங்கிலாலான தூண்டிலைக் கொண்டு மீன்பிடிக்கச் சொல்லலாம்.
5. கடற்கரையில் குளங்கள் வெட்டி அதில் மீன் வளர்த்து பிடிக்கச் சொல்லலாம்.
6. மீனவர்கள் படகுவிட ஆசைப்பட்டால் மழை நேரங்களில் காகிதப் படகு செய்து விடச் சொல்லலாம்.
7. மீனவர்கள் பொழுது போக்குவதற்கு தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்து மானாட, மயிலாட, எல்லாமே சிரிப்புதான், கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு, சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கச் சொல்லலாம்.
குறிப்பு: நாங்க ஏதாச்சும் இறையாண்மையை மீறியிருந்தால் மன்னிச்சிடுங்க சாமியோவ்.
-எம்.பழனிமுருகன்,
தஞ்சாவூர்