இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



ஞாயிறு, ஜனவரி 01, 2012

முல்லைப் பெரியாறு அணை: விறகாகும் மக்கள்.. குளிர்காயும் அரசுகள்...

இன்று தமிழகத்தை மிகப் பெரிய அளவில் உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளில் ஒன்று முல்லைப் பெரியாறு அணை. தமிழகத்தின் தென் பகுதிகளான தேனி, கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக தன்னெழுச்சியாக எந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளையும் நம்பாமல் முல்லைப் பெரியாறு அணையைக் கைப்பற்றுவோம் என, நவீன ஆயுதங்களுடன் அவர்களை மறித்து நிற்கும் அரசின் அடியாட் களையும்  (காவல்துறை), அரசையும் எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.

பொய்மையால் பின்னப்படும் பார்ப்பனியம்: 7 ஆம் அறிவு திரைப்படத்தை முன்வைத்து...

'சாளரம்' போன்ற  ஒரு முற்போக்கான இதழில் ஒரு வணிகத்' திரைப்படத்தை விமர்சித்து ஒரு கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை நாம் அடிக்கடி சந்திக்க நேர்கிறது. இது, இதழை நிறையப் பேரைப் படிக்க வைப்பதற்கான ஒரு 'வணிகத்தனமான' உத்தி என்றுகூட விமர்சிக்கப்படுவதுண்டு. இன்னும் சிலர் இப்படிச் சொல்வதுண்டு: திரைப்படத்தை எதிர்மறையாக விமர்சிப்பது கூட அந்தத் திரைப் படத்திற்கான விளம்பரமாகத்தான் ஆகிவிடுகிறது...

உண்மை அதுவல்ல. ஒரு முற்போக்கான இதழில், சமூக மாற்றத்திற்கான பணியிலிருக்கும் ஒரு இதழில் திரைப்படங்களை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ விமர்சிப்பதன் நோக்கம் வேறு.

பால், மின், பேருந்துக் கட்டண உயர்வு ஜெயா அரசு மக்களுக்குத் தோண்டிய சவக்குழி - தலையங்கம்

மக்களின் இன்றைய வாழ்க்கைக்கு மிக அத்தியாவசிய பொருட்களாகி விட்ட பால், பேருந்து, மின்சாரம் ஆகியவற்றின் மீது கடும் விலையேற்றத்தை திணித்து ஒட்டுமொத்த மக்களின் வயிற்றில் அடித்தது ஜெயா அரசு. பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பற்றவே இந்த விலைவாசி ஏற்றம் என பல புள்ளிவிவர நாடகங்களை முன் வைத்து இதை நியாயப்படுத்துகின்றது. ஆனால் உண்மை அவ்வாறாக இல்லை. மேலும் இது தமிழகத்தின் ஜெயா அரசின் விலையேற்றம் மட்டுமே அல்ல. மத்திய மன்மோகன் அரசு பெட்ரோல், உணவுப் பொருட்கள், எரிவாயு என மக்களின் அத்தியாவசிய பொருட்கள் மீது விலை ஏற்றுவது பொதுத்துறை நிறுவனங்களை தவிர்த்து விடுவதும் என திட்டமிட்டு ஏற்படுத்துகிறது.

கல்வி உரிமைச் சட்டம்: மற்றுமொரு ஏமாற்று திட்டம்

“இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து பிரிவு 45 இன் படி, 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அரசே இன்னும் 10 ஆண்டுகளில் கல்வி கொடுக்கும்” இந்தக் கூற்று ஏதோ இன்றைய அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி அல்ல. 1950 ஆம் ஆண்டு இந்திய பிரதமராகப் பொறுப்பேற்ற நேருவால் சொல்லப்பட்டது. அவர் திருவாயால் சொன்னதை அவரும் நிறைவேற்றவில்லை, பின்னால்; மாறி மாறி ஆண்ட எந்த ஒரு கட்சியும் அதை கண்டுகொள்ளவே இல்லை.

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014