இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



சனி, நவம்பர் 20, 2010

ஒபாமா இந்தியா வருகை: யாருக்கு நன்மை? இந்தியாவுக்கா? அமெரிக்காவுக்கா?

ருப்புக் கொடிப் போராட்டங்கள், எதிர்ப்புச் சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டங்கள், பந்த்களுக்கு இடையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியாவில் ஒரு 'நான்கு நாள் சுற்றுப் பயணத்தை' முடித்துவிட்டுச் சென்றுள்ளார். அமெரிக்கப் படைகளின் பாதுகாப்புடன், 250 க்கும் மேற்பட்ட அமெரிக்க முதலாளிகளுடன் (CEOs) வந்து ஒரு பொருளாதாரப் படையெடுப்பையே நடத்திவிட்டு சென்றுள்ளார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு நடத்தி தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளார், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். நவம்பர் 6 ஆம் தேதி மும்பை வந்திறங்கிய ஒபாமா, அங்கு இந்திய, அமெரிக்க முதலாளிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மறுநாள் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் நவம்பர் 8 ஆம் தேதி டெல்லியில் மன்மொகன் சிங்கையும், பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேசினார். பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் பேசிவிட்டு மறுநாள் நவம்பர் 9 ஆம் தேதி இந்தோனேசியா கிளம்பிச் சென்றுவிட்டார் (தீபாவளி கொண்டாடியது, ஊர் சுற்றியது, மாணவர்களிடம் உரையாடியது, விதவிதமான உணவு உண்டது, காந்திக்கு அஞ்சலி செலுத்தியது போன்ற பத்திரிகைகளின் முன்பக்கங்களை அலங்கரித்த இதர செய்திகள் பற்றி விரிவாக சொல்லத் தேவையில்லை). இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாகவே ஒபாமா இந்தியா வந்து சென்றுள்ளார்.

அயோத்தி: மரத்தடி தீர்ப்பு

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி தீர்ப்பு சர்ச்சைக்குரிய இடம்தான் இராமர் பிறந்த இடம் என்று கூறியுள்ளது. இதுவரை இராமர் கோயிலைத் தேடிக்கொண்டிருந்த தொல்லியல் ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், அறிவியல் அறிஞர்களும் உறுதிபடுதர்த முடியாத இடத்தை இந்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இராமர் கிருதயுகத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். கற்பனைக்கு எட்டாத ஆண்டுகளுக்கு முன்பு, இராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் இடம், சர்ச்சைக்குரிய இந்த இடம்தான் என்று தீர்ப்பளித்த நீதிபதி தரம்சீர் சர்மாவை பாராட்டாமல் இருக்க முடியாது.

ஸ்பெக்ட்ரம்: ஊழலுக்கெல்லாம் 'இராசா

பெயரில் மட்டுமே முற்போக்கை வைத்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) ஊழல் உச்சபட்ச எல்லையை எட்டியுள்ளது. மகாராஷ்டிரத்தில் கார்கில் வீரர்களுக்கு வீடு ஒதுக்கீட்டில் முதல்வர் அசோக் சவான் ஊழல். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் முறைகேடு. ரூ.70,000 கோடி செலவில் நடத்திய காமன்வெல்த் போட்டியில் ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் கல்மாடி பல கோடி ஊழல். அடுத்ததாக '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா ரூ.1.76 இலட்சம் கோடி (ரூ.1,76,000,00,00,000) ஊழல்.

இந்தியக் கல்வி வரலாறு

1. பிராமணக் கல்வி முறையும், பௌத்தக் கல்வி முறையும்

ம்  நாட்டில் 54 % மக்கள் 25 வயதுக்குட்பட்டோரே எனில், நம் நாடு இளைஞர்களின் நாடு என கூறலாம். ஆனால், இந்த இளைஞர்களின் நாட்டில் தான் உலகிலேயே அதிக கல்வி அறிவில்லாத மக்கள் வசிக்கின்றனர். இந்தியாவை விட மக்கள் தொகையில் பெரிய நாடான சீனா மற்றும் பல வறுமை தோய்ந்த நாடுகளில் 100 % கல்வியறிவை பலர் பத்தாண்டுகளுக்கு முன்னரே எட்டி விட்டனர். 63 ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரம் வாங்கிவிட்டோம் என்று கூறிக்கொள்கிற நம் நாட்டிலோ, இன்றும் மூன்றில் இரண்டு பங்கு கூட கற்றவர்கள் என்ற நிலையை எட்ட முடியாமல் இருப்பது மிகவும் கேவலமானது, வெட்கப்படவேண்டியது இந்திய அரசின் அக்கறையற்ற தன்மைக்கு இது ஒரு நல்ல சான்று. உண்மையில் அரசால் அனைவருக்கும் கல்வி கொடுக்க முடியாத ஒரு மிகப்பெரிய கடினமான பணியா என்றால் இல்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். இந்திய ஆளும் வர்க்கங்களின் தலைமைப் பாத்திரத்தில் இருக்கும் மேல்சாதிக்காரர்கள் அனை வருக்கும் கட்டாய கல்வியை வழங்க மறுத்து வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு ஒரே கருவியான கல்வியை பெற நாம் அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் நாம் எல்லோரும் இந்திய கல்வி வரலாறு பற்றிய ஒரு அடிப்படை புரிதல் ஏற்படுத்த வேண்டுமென்ற விருப்பத்தின் விளைவே இத்தொடர் கட்டுரை. ஏனெனில் வரலாற்றை அறியாதவன் வரலாற்றை படைக்க முடியாது. எனவே அனைவருக்கும் கட்டாய, இலவச, தாய்மொழிவழிக் கல்வி என்ற நிலையை ஏற்படுத்த அனைவரும் ஒன்று திரண்டு போராடி அறிவார்ந்த சமூகத்தைப் படைப்போம். அப்போராட்டத்திற்கு வித்தாக இந்திய கல்வி கல்வி வரலாறு பற்றி பார்ப்போம்.

எந்திரன்: கற்பனை வறட்சி

 சமீபத்தில் 'கிராஃபிக்ஸ்' காட்சிகளுக்காக ஆஸ்கார் விருது பெற்ற ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார் படத்தை நிறைய பேர் பார்த்திருப்போம். ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா அதில் குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பழங்குடி மக்களைக் காடுகளிலிருந்து விரட்டியடித்துவிட்டு, அவர்களது கனிம வளங்களைக் கொள்ளையடிப்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அது தொடர்பான ஒரு புனைகதைதான் 'அவதார்'. 'டைட்டானிக்', 'இண்டிபெண்டன்ஸ் டே' போன்ற அரசியலற்ற படங்களை எடுத்த ஜேம்ஸ் கேமரூனால் இப்படிப்பட்ட தீவிரமான அரசியல் படங்களையும் எடுக்க முடியும் என்று 'அவதார்' உணர்த்தியது. 'ஜுராசிக் பார்க்' போன்ற படங்களை எடுத்த ஸ்டீபன் ஸ்பீல்பர்க்தான் நாஜிக்களின் கொடூரமான வதைமுகாம்களில் சித்திரவதைப்பட்ட யூதர்களைப் பற்றிய அருமையான படமான 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்'டையும் எடுத்தவர். 1993 இல் இப்படம் ஆஸ்கார் விருது பெற்றது. மெல் கிப்ஸனின் 'அப்போகலிப்டா' மாயன் பழங்குடிகளின் வரலாற்றை, அதன் அத்தனை யதார்த்தங்களோடும் அழகாக பதிவு செய்த ஒரு படம். இப்படி சில ஹாலிவுட் இயக்குநர்கள் உலக அரசியலையும், வரலாற்றையும் ஆழமாகப் படித்த, அரசியல் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். சில நல்ல படங்களையும் அவர்களால் எடுக்க முடிகிறது.

கொலசாமிக்கு கடிதாசி

ஏப்பா... ஏ! பெரியகருப்பா. உன் மண்ணுல வாழுற மக்களுக்கு காவகாக்குற காவக்கருப்பா, நேத்திக்கடன் தீத்து வைக்கிற மொதலக்குளம் குட்டிக்கருப்பா, கொலவபோட்டா குறி சொல்லுற சங்கிலிக்கருப்பா, கெடா வெட்டி பொங்க வைக்கிற சின்னக்கருப்பா, உனக்கொரு சேதி தெரியுமா? தெரிஞ்சாலும் தீத்து வைக்க அருவாளத் தூக்க தெம்பு இருக்கா? உன் வாசல்ல எத்தன பேரு ஞாயத்துக்காக மண்ணவாரி தூத்தாக. அந்த மண்ணுபூரா(ம்) உன் மக்க தலையிலே விழுகுது, உனக்குத் தெரியலையா.

ஆடம்பரத்தில் அரசுகள் அதலபாதாளத்தில் பொதுமக்கள்

உத்திரபிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதி, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி உள்ளது. இங்கு உள்ள 13 மாவட்டங்களை, உ.பி. அரசு புறக்கணிப்பதாகக் கூறி, தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள், கோரி வருகின்றனர்.

ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ள பண்டல்கண்ட் பகுதியில் கந்து வட்டிகாரர்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. கடன் வாங்கியவர்கள் நிலம், வீடு வைத்திருந்தால் அதை கந்துவட்டி கும்பல் அபகரித்துக் கொள்கிறது. சொத்து எதுவும் இல்லையென்றால், கடனைத் திருப்பி வசூலிக்கும் விதமே கொடூரமானது.

பெருவெடிப்பு முதல் பொதுவுடைமை வரை - பாகம் 9

பாகம்-7 இல்  மனித சமுதாயம் என்பது என்ன? அது எப்படித் தோன்றியது? எனக் கண்டோம். கடந்த இதழில், பாகம்-8 இல், சமுதாய அமைப்பைத் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உற்பத்தி முறை எவ்வாறு திகழ்கிறது என்று பார்த்தோம். உற்பத்தி முறையின் இரண்டு கூறுகளான உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் விளக்கங்களைப் பார்த்தோம். மேலும், உற்பத்தி முறை சமுதாயத்தின் அடிக்கட்டுமான மாகவும், அரசு, பண்பாடு, கலை, இலக்கியம், மதங்கள், தத்துவங்கள், கல்வி, ஆணாதிக்கம், வர்க்கங்கள், சட்டம் போன்றவை மேல்கட்டுமான மாகவும் அமைந்துள்ளன எனக் கண்டோம். இனி...

கருத்துரிமையை நொறுக்கும் இந்திய அரசின் அரக்கமுகம்

'இந்தியா தேசிய இனங்களின் ஒரு கொடுங்கோல் சிறைக்கூடம்' என்பதை பல வருடங்களாக மக்கள் அனுபவ ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் உணர்ந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தொடர்ச்சியாகப் பல வருடங்களாக தங்களது சுயநிர்ணய உரிமைக்காக பலதரப்பட்ட மக்கள் வீரதீரத்துடன் போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அது காஷ்மீராக இருந்தாலும் சரி, மணிப்பூர், அஸ்ஸாம், நாகலாந்தாக இருந்தாலும் சரி எங்கும் மக்களே தங்களது சுயநிர்ணய உரிமைக்காக இந்திய பாசிச அரசை எதிர்த்தும், இந்திய இராணுவத்தை தங்களுக்கு கிடைக்கும் கல், அம்பு என்று கிடைக்கும் ஆயுதங்களைக் கொண்டு எதிர்த்துக் கொண்டுதான் வருகிறார்கள். மக்கள் உயிர் தியாகங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. தங்களது எத்தனை உயிர்களைப் பணயம் வைத்தும் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். இதுவே காஷ்மீரிலும் கூட நடக்கிறது. ஆனால் இந்திய பாசிச அரசோ இந்த மக்கள் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக தீவிரவாத போராட்டமாக சித்தரித்து மக்களை ஒடுக்கிக் கொண்டு வருகிறது. ஆனால், காஷ்மீர் மக்கள் ஒதுங்குவதும் இல்லை. ஒடுங்குவதும் இல்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை அவர்களுடைய போராட்டக் கோரிக்கை சுய நிர்ணய உரிமையாகத் தான் உள்ளது.

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014