இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வியாழன், ஆகஸ்ட் 19, 2010

சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம்: கருணாநிதியின் காலில் நசுங்கும் கருத்துரிமை

1983 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை சிங்களக் கடற்படை, சுமார் 500 தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டும், அடித்தும் கொன்றுள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்களைப் படுகாயப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படும் செய்தியை வெளியிட்டு அடிக்கடி கதறும் ஆங்கில, இந்தித் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் இதுவரை ‘இந்திய’ மீனவர்கள் கொல்லப்படும் செய்தியைக் கண்டுகொண்டதில்லை. மும்பையில் தாஜ் ஹோட்டல் தாக்குதலில் இறந்தவர்களை விட, தமிழ்நாட்டில் இறந்த மீனவர்களின் எண்ணிக்கை சில மடங்கு அதிகம். ஆனால், மும்பைத் தாக்குதலின் போது பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் திணித்த ஊடகங்கள் இதுவரை இலங்கை அரசை பெரிதாகக் கண்டிக்கக் கூட இல்லை.

நவீனத் தீண்டாமை: ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகளின் அவலம்

தமிழகத்தின் அனேக சீரழிவுகளில் நம்மைக் கவலையடையச் செய்கிற அவலமாக ஆதி திராவிடர் நலத்துறையின் கீழியங்கும் மாணவ மாணவிகளுக்கான விடுதிகள் மோசமான சூழலில் உள்ளதைக் கூறலாம். முறையான பராமரிப்பும், உள்கட்டமைப்பு வசதிகளும், கழிப்பறை முதலான வசதிகளுமற்ற நிலைகளில் இயங்கும் தமிழகத்தின் ஆதிதிராவிடர் நல மாணவ மாணவியற் விடுதிகளில் உள்ள மற்றொரு மனங்கலங்கச்செய்யும் நிலை ஆதி திராவிடர் என்கிற தீண்டாமையைக் கடைபிடித்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளாகும்.

கயர்லாஞ்சி: சாதிப் படுகொலையும் நீதிப் படுகொலையும்

‘காலம் தாழ்த்தி கிடைக்கும் நீதி அநீதிக்கு சமமானது’ என்பார்கள். இங்கு காலம் தாழ்த்திகூட நீதி கிடைப்பதில்லை. இலாப வெறிக்காக ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களைக் கொன்று குவித்த கொலைகாரர்களைக் காப்பாற்றி, நீதியை மறுத்து மீண்டுமொரு படுகொலையை போபால் மக்கள் மீது அரங்கேற்றிய நீதிமன்றத் தீர்ப்பைப் போலவே இன்னொன்றும் வந்திருக்கிறது. தலித் குடும்பமொன்றை ஊர் மையப்பகுதியில் நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி அதன் பின்பு படுகொலை செய்த சாதி வெறி பிடித்த காட்டுமிராண்டிகளுடன் கைகுலுக்கி, இனிவரும் காலங்களில் ஆதிக்க சாதியினர் எவரும் தலித் மக்கள்மீது இது போன்ற கொடூரங்களை நிகழ்த்திக் கொள்ள ‘லைசன்ஸ்’ வழங்கியிருக்கிறது கயர்லாஞ்சி தீர்ப்பு.

உங்கள் பொறுப்புள்ள பிள்ளை (கடிதம்)

அன்புள்ள அம்மாவுக்கு...

நீங்கள் பெற்றதுக்காக என் சிந்தனையும் உழைப்பும் உங்களுக்கு அடிமை கிடையாது. இது எனக்கு மட்டுமல்ல, மனிதனாக பிறந்த எல்லோருக்கும் பொருந்தும்.

என்னை நம் குடும்பத்தின் ஒருத்தன் என்று மட்டும் நீங்கள் கருதுகிறீர்கள். இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?  ‘மனித குல சமூகத்தில் நான் தனிமனிதன் மட்டுமில்லை. குடும்பத்திலும் ஒருத்தனாக இருக்கிறேன்.’

எனக்கும் பொறுப்புகள் இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். குடும்பத்தில் மட்டுமல்ல, அதைவிட மனிதகுல சமூகத்தில்!


காஷ்மீர்: இந்தியாவின் துரோக வரலாறு

பூலோக சொர்க்கம் என வர்ணிக்கப்படும் காஷ்மீர் இன்று தினந்தோறும் நடைபெறும் கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது. அன்றாட நிகழ்வாக பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வழியாக காஷ்மீர் பிரச்சனையை பார்த்தோமானால் சாலைகளில் பொது மக்கள் சுடப்பட்டு இறந்து கிடப்பதும், நவீன ஆயுதங்களுடன் இராணுவ வீரர்கள் தெருக்களில் அணிவகுப்பதும், சாலைகளில் வண்டிகள் தீப்பற்றி எரிவதும், ஊரடங்கு உத்தரவின் மூலம் வெறிச்சோடி கிடக்கும் தெருக்களும், போராட்டக்காரர்கள் இராணுவத்தினர் மீது கற்களை எறிவதுமான நிகழ்வுகள் காட்டப்படுகின்றன.

முதுகாட்டில் காக்கையுகுத்த பிணம் - அமித் ஷா: முகமூடி கிழிந்த இனத்துவேஷி

‘ஒரு விசயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த செப்டம்பர் 2003 ஆம் ஆண்டு குஜராத் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைத் தாங்கள் இழந்து விட்டதாக, சுப்ரிம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதன் பிறகு கடந்த ஏப்பிரலில் 2004 ஆம் ஆண்டு, ஆதரவற்ற குழந்தைகளும், அபலைப் பெண்களும் உயிரோடு எரிக்கப்படும் போது, அதைச் சற்றும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு நவீன காலத்திய நீரோ மன்னன் என்று தங்களை சுப்ரிம், கோர்ட் நீதிபதி விமர்சித்துள்ளார். சுப்ரிம் கோர்ட்டுடன் தங்களுக்குப் பிரச்சனை உள்ளதாகத் தெரிகிறதே’
அக்டோபர் 19, 2007 அன்று சி.என்.என். - ஐ.பி.என் தொலைக் காட்சியில் கரன்தாப்பர் குஜராத் முதல்வர் மோடியை பேட்டி கண்ட போது கேட்ட கேள்வி.

பெரு வெடிப்பு முதல் பொதுவுடைமை வரை பாகம் - 8

கடந்த இதழில் மனித சமுதாயம் என்பது என்ன, மனிதர்கள் எவ்வாறு ஒரு சமுதாயமாகப் பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள், அத்தகையதொரு சமுதாயம் எப்படி படிப்படியாகத் தோற்றமெடுத்தது, என்பனவற்றைக் கண்டோம். காட்டுமிராண்டி நிலை மற்றும் அநாகரிக நிலையின் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் மனிதன், நாகரிக நிலையை அடைந்தான் என்பதைக் கண்டோம். இனி...

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014