இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



சனி, நவம்பர் 12, 2011

மூன்று தமிழர் விடுதலை: ஜெயா அரசின் நயவஞ்சக நாடகம்


ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் இரத்தச் சுவடுகளின் வாடை கூட நம்மை விட்டு இன்னும் விலகவில்லை. அதற்குள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர்களைத் தூக்கிலிடத் துடிக்கும் அரசுக்கெதிராக, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகமெங்கும் பொதுமக்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், சனநாயக, முற்போக்கு அமைப்புகள் கடந்த பல மாதங்களாக மிகத் தீவிரமாக பல்வேறு வடிவங்களில் போராடினர். பொது மக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தமிழகமெங்கும் உச்சக்கட்டத்தை எட்டியபோது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடி தனது இன்னுயிரை நீத்து போராட்டத்திற்கு ஆயுதமாக தன் உடலை தந்து போராட்டத்தை இன்னும் தீவிரமாக்கினார். பொய் சொல்ல எந்தக் கூச்சமும் இல்லாத ஜெயலலிதா, ஒரு மாபெரும் அண்டப்புழுகை மக்கள் நம்பும் வகையில் சொன்னார். 

வியாழன், நவம்பர் 10, 2011

பரமக்குடி பயங்கரம்: சாதி வெறியர்களுக்கு ஜெயா கொடுத்த நரபலி


கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் சுற்றுக்கு விடப்பட்ட சில காணொளிகளும் (video) ஆவணப் படங்களும் ஈழப்போரின் கொடூரங்களை நமக்கு இரத்தமும் சதையுமாக காட்டின. கொல்லப்பட்டவர்களின் உடல்களை சிங்கள இனவெறியர்கள் இறந்த மிருகங்களின் உடல்களைப் போல இழுத்து வந்து வாகனங்களுக்குள் வீசும் கொடூரத்தைக் கண்டு தமிழ்ச் சமூகமே அதிர்ந்து போனோம்.

    சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் - பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் குறைவான மக்கள் மத்தியில் மட்டும் சுற்றுக்குக் கிடைத்தன. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துடன் அதிலொரு பகுதி கலைஞர் தொலைக்காட்சியிலும் பலமுறை ஒளிபரப்பப்பட்டது. காவல்துறையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துவதையும், துப்பாக்கி குண்டு துளைத்து இறந்து போய்விட்ட அல்லது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களின் உடல்களை மிருகங்களைப் போல தூக்கிவந்து சிறிய போலீஸ் வாகனத்திற்குள் திணித்து படாரென்று கதவைச் சாத்துவதையும், இறந்து போனவரின் வேட்டியை உருவி அவருடைய உடலுக்கே அதைப் போர்த்துவதையும், திருப்பி அடிக்க முடியாத தள்ளாத வயதுடைய முதியவரை, விரும்பிய காவலர்கள், அதிகாரிகள் எல்லாம் அடித்துச் சித்திரவதை செய்வதையும் கண்டு இந்தச் சமூகத்தின் சிறிய பிரிவினர் மட்டுமே குமுறினார்கள்.

புதன், நவம்பர் 09, 2011

ஊழல்களின் மறுபக்கம்


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்,  இஸ்ரோ ஊழல், எஸ்பேண்ட் ஊழல், உணவு தானிய ஊழல் என இன்றும் தொடர்ந்து கொண்டு போகும் அரசின் இலட்சம் கோடிகளின் ஊழல்களின் மத்தியில் 'ஊழல் இல்லா இந்தியா ஒளிமயமான இந்தியா', வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற முழக்கங்களையும், மத்திய அரசின் அறிக்கைகளையும் நாம் பத்திரிகை, செய்திகளில் பார்த்து வருகின்றோம். உண்மையில் இது போன்ற முழக்கங்களும், அன்னா அசாரேவின் லோக்பால் நடைமுறை, அத்வானி ரதயாத்திரை, ராம்தேவ் உண்ணாவிரதம் போன்றவைகளும், மத்திய அரசின் அறிக்கைகளும் ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகளா? இதை அறிந்து கொள்ள வேண்டுமானால் ஊழலின் பிறப்பிடத் தையும், அவைகள் வளரும் முறைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இவைகள் நமக்கு நன்மையா? தீமையா? என்று புரிந்து கொள்வதோடு ஊழலை ஒழிப்பதற்கான நம்முடைய சரியான வழியையும் கண்டுகொள்ள முடியும். 

செவ்வாய், நவம்பர் 08, 2011

மனித உயிர் வைத்து சூதாடும் அணு உலை விற்பனை நிறுவனங்கள் - கூடங்குளம் அணு உலையின் பின்னணி


மின்வெட்டு... கடந்த சில ஆண்டுகளாக மின்சார வெட்டு எல்லா இடங்களிலும் நீக்கமற இருந்து வருகிறது. இரண்டு மணி நேரம் முதல் எட்டு மணி நேரத்திற்கு மேலாக நடப்பில் உள்ளது. அலுவலகப் பணியாளர்கள் பணி முழுவதும் நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கின்றனர். உற்பத்தி செய்ய இயலாமல் சிறு உற்பத்தியாளர்களும், வியாபாரம் செய்ய இயலாமல் சிறு வணிகர்களும் பாதிக்கப்படுகின்றனர். படிக்க முடியாமல் மாணவர்கள் அல்லல்படுகின்றனர் இப்படி அனைத்து தரப்பட்ட மக்களும் மின்வெட்டால் துன்பப்பட்டு வருகின்றனர்.

திங்கள், நவம்பர் 07, 2011

பெருவெடிப்பு முதல் பொதுவுடைமை வரை... பாகம்-10


கடந்த இதழில், பாகம்-9 இல் சமுதாயத்தில் உற்பத்தி சக்திகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்து, உற்பத்தி உறவுகளுடன் (சொத்துடைமை உறவுகளுடன்) முரண்படுவதையும், அதன் விளைவாக சமுதாய, பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதையும் பற்றி பார்த்தோம். இதன் விளைவாக ஏற்படும் அரசியல்-சமுதாயப் புரட்சி பழைய சமூக அமைப்பை மாற்றியமைத்து, அதனிடத்தில் புதிய சமூக அமைப்பை நிறுவும் என்பதையும் பார்த்தோம். இவ்வாறு, துவக்க காலத்தில் நிலவிய ஆதிப் பொதுவுடைமைச் சமூகம் மாற்றமடைந்து அடிமை உடைமைச் சமூகம் தோன்றியது பற்றியும் எஜமானர்கள் மற்றும் அடிமை வர்க்கங்களைக் கொண்டிருந்த அச்சமூக அமைப்பு எப்படி இருந்தது என்பது பற்றியும் கடந்த இதழில் பார்த்தோம்.  இனி...

ஞாயிறு, நவம்பர் 06, 2011

வாகை சூட வா: வணிக சினிமா சொல்ல மறுத்த கதை

சமூக மாற்றத்திற்கான கலை வடிவங்களில் திரைப்படங்கள் பங்குகொண்ட காலங்கள் மாறி, வெறும் பொழுதுபோக்கிற்கான தளமாகவும், முதலீட்டுக்கான களமாகவும் மாறி இருக்கிறது. இது சமூகத்தில் உள்ள வியாபாரத்தின் (முதலாளித்துவத்தின்) தன்மையை காட்டுகிறது. இங்கே சமூகத்திற்குத் தேவையான திரைப்படங்கள்  எளிதில் வருவதும் இல்லை, வந்தால் சொல்லக்கூடிய கருத்துக்களை தெரிவிக்க முழு உரிமையும் தணிக்கை வாரியத்தால் தரப்படுவதுமில்லை. இன்று பெருமளவு சமூகத்தில் மிகப்பெரும் சக்தியாக உள்ள ஊடகங்களும், திரைப்படங்களும் மக்களுக்கான தேவையைப் புரிந்து தனது வேலையைச் செய்வதில்லை. காரணம் இவைகள் மக்களைச் சுரண்டும் முதலாளிகள் மற்றும் ஆளும் வர்க்க நலனை பார்க்கும் அரசு கையிலே தவழ்வதுதான்.

சனி, நவம்பர் 05, 2011

வால் தெரு ஆக்கிரமிப்பு போராட்டம் ஆட்டம் காணும் அமெரிக்க ஏகாதிபத்தியம்

 2008 இல் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தத்தினால் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். வீட்டை அடமானம் வைத்தவர்கள் வீடுகளை இழந்தனர். நம்முடைய ஊடகங்களால் சொர்க்கபுரிகளென வர்ணிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளில் மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் சாலையோரங்களிலும், பாலங்களின் அடியிலும், அட்டைபெட்டியிலும் உறங்கினர். படித்த பட்டதாரிகள் வேலையில்லாமல் உணவுக்காகப் பிச்சையெடுத்தனர். இப்பொருளாதாரப் பெருமந்தத்தை ஏற்படுத்திய பெரும் வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், மூலதன நிதியங்கள் ஆகிய கார்ப்பரேட்டுகளைக் காப்பாற்ற பல இலட்சம் கோடி டாலர்களை மக்கள் பணத்தை வாரி இறைத்த அரசுகள், தங்களின் கருவூலத்தை மீண்டும் நிரப்ப மக்களின் மீது அதிக வரிவிதிக்க ஆரம்பித்த பிறகு மேற்கு நாடுகளின் மக்கள் போராட்டம் வெடித்து எழுந்தது. ''மக்களின் பணத்தில் மக்களின் கடனை ரத்து செய்! பெருமுதலாளிகளுக்குக் கொடுக்காதே!" என்றும், ''பேராசைக்காரர்களான பெருமுதலாளிகளுக்கு வரியை போடு! உழைக்கும் மக்களுக்கல்ல!" என முழங்கினர்.

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014